திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி அமிர்தா (34). நேற்று மதியம் அமிர்தா, அருகே உள்ள கடைக்கு சென்றார். அங்கு சாலையை கடக்க முயன்றபோது, பைக்கில் வந்த 2 பேர், அவரது கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றனர். இதை கண்ட அமிர்தா, சுதாரித்து கொண்டு, செயினை பிடித்து கொண்டார். ஆனால் அவர்கள், பைக் வேகமாக இயக்கி, அவரை இழுத்து சென்று, கீழே தள்ளி விட்டு தப்பினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தமக்கள், மர்மநபர்களை விரட்டி சென்றனர்.
மேலும், அருகில் இருந்த ஆட்டோ ஸ்டேண்டுக்கு தகவல் கொடுத்து, ஆட்டோக்களை சாலையின் குறுக்கே ஆட்டோவை குறுக்கே நிறுத்தினர். இதை கண் கண்ட மர்மநபர்கள், திரும்பி சென்றனர். உடனே, பொதுமக்கள் அவர்களை விரட்டினர்.