ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி. ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெற்று வருவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் மாலை ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.