தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் உடனான முத்தரப்பு பேச்சில் உடன்பாடு

சென்னை: அடுத்தாண்டு மார்ச் மாதம் இறுதிவரை சிக்கலின்றி திரைப்படங்கள் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் உடனான முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நவம்பர் வரை வி.பி.எஃப் கட்டணமின்றி திரைப்படங்கள் வெளியிடலாம் என்றிருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மார்ச் மாதத்திற்கு பின் எந்த கட்டண அடிப்படையில் படம் வெளியிடுவது என்பது பற்றி அடுத்தகட்ட பேச்சில் முடிவு எடுக்கப்படும்.

Related Stories: