முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி(57). இவரது வீட்டுக்கு, ஈரோட்டை சேர்ந்த தம்பி பன்னீர்செல்வம் (45), அவரது மகள் தெய்வப்பிரியா(24), மருமகன் கோவை தனியார் கல்லூரி பேராசிரியர் சரவணக்குமார் (31), உறவினரான கரூரை சேர்ந்த ரகுராமனின் குழந்தைகள் ரத்தீஷ்(12), மிதுன்(8) உள்ளிட்ட 9 பேர் விருந்தினராக வந்திருந்தனர்.அனைவரும் நேற்று மதியம் முசிறி பரிசல்துறை சாலையிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென புதை மணலில் சிக்கி சரவணக்குமார் மாயமானார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, ரத்தீஷ், மிதுன் ஆகியோரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.