லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு ஊழியரை கைது செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் இருப்பிடமாகவே உத்திரபிரதேசம் மாறி வருகிறது என்றே குறிப்பிடலாம் . கடந்து சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 20 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளர் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாண்டா மாவட்டத்தில் நீர்பாசனத்துறை பொறியாளரை கைது செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.