கோவை: தீபாவளி பண்டிகை காலங்களில் வெளியூர் சென்று திரும்பி வந்தவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் சற்று குறைவாக இருக்கிறது. கடந்த மாதங்களில் நாள் ஒன்றுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 150 பேர் வரை மட்டுமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதுஒருபுறம் இருக்க தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்காத வண்ணம் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாக பல்வேறு காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம்கள் மூலமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.