புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் விஜய்சேதுபதி

சென்னை: கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த போது விபத்தில் சிக்கிய தவசி, தொடந்து ஊரடங்கால் படப்பிடிப்பு இன்றி முடங்கினார். இடையில் புற்று நோய் தீவிரம் அடைந்ததால் தவசியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து மீசையின்றி பரிதாபமாக காட்சி அளிக்கின்றார். பெரிய மீசையுடன் நடித்து வந்த நடிகர் தவசி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு தேவையான உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.

தற்போது மதுரை நரிமேட்டில் உள்ள திமுக எம்.எல்.ஏ சரவணனின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவிப்பதாகவும் நடிகர்கள், திரை உலகினர், தொழில் நுட்பகலைஞர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், கருப்பன், ரஜினிமுருகன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடத்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25,000 நிதியுதவி வழங்கினார்.

அதேபோல் நடிகர் சூரி தவசிக்கு ரூ. 20,000 மற்றும் அவருடன் மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்குவதாக கூறினார். மேலும் நடிகர் தவசிக்கு வேறு எந்த உதவி வேண்டுமானும் செய்ய தயாராக உள்ளதாக நடிகர் சூரி கூறியுள்ளார். மதுரையில் சிகிச்சை பெற்று வரும் தசவிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும் நடிகர் சௌந்தராஜன் அவர்களும் ரூ. 10,000 நிதியுதவி வழங்கினார்.

Related Stories: