சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியை அதை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது அணையில் தேங்கியுள்ள தண்ணீரை குடிப்பதற்காக கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். நேற்று மாலை வனப்பகுதியைவிட்டு வெளியேறிய 2 குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு வந்தன.
அணையில் தேங்கியுள்ள நீரில் இறங்கிய காட்டு யானைகள் தனது தும்பிக்கையால் நீரை உறிஞ்சி குடித்ததோடு தண்ணீருக்குள் இறங்கி சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தன.