காசிமேட்டில் கடல் அலையில் சிக்கி மாயமான 5 சிறுவர்களில் 4 பேரின் சடலங்கள் மீட்பு!

சென்னை :காசிமேட்டில் கடல் அலையில் சிக்கி மாயமான 5 சிறுவர்களில்  4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. காசிமேடு கடலில் குளித்து விளையாடியபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி, 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மீனவர்கள் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாரும், மீனவர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட 19 வயது வாலிபர், அலையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.மேலும் மீட்புப் பணியின் போது இன்று காலை மூன்று சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஒருவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் ஒரு சிறுமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: