மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் மீண்டும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் கோயில் உள்ளிட்ட வழிபாடு தலங்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மும்பை சித்தி விநாயகர், நாக்பூர் கணேஷ்தேகி கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.