கொரோனா டெஸ்டில் இந்திய வீரர்கள் ‘ஆல் பாஸ்’: பயிற்சியை தொடங்கினர்

சிட்னி: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து உற்சாகமாக பயிற்சியை தொடங்கியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக சிட்னி சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து, இந்திய வீரர்கள் உற்சாகமாக பயிற்சியை தொடங்கி உள்ளனர். எனினும், 14 நாள் தனிமைப்படுத்தல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நவ.27ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: