போலீசுக்கு யோகா பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசாரின் மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ளும் போலீசாரால் பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.

எனவே, போலீசாருக்கு பொது மக்களுடன் பழகும் முறைகள் மற்றும் அவர்களின் மன அழுத்தத்தை போக்க பயிற்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுந்தது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசாரின் மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

Related Stories: