செங்கல்பட்டு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கானோர், தங்களது சொந்த ஊர்களில், பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் நேற்று பஸ், கார், இருசக்கர வாகனங்களில் பயணிக்க தொடங்கினர். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.