பழநி : பழநி அருகே குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழநி பகுதியில் உள்ள கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக் கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயத்திற்கு இப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்பாசனம் அவசியமானதாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பழநி பகுதியில் விவசாய பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி பழநி பகுதியில் உள்ள பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி ஆகிய அணைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன.