வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலாரில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் ஆபீஸ்களில் ரெய்டு

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலாரில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுலவகங்களில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். தீபாவளி பண்டிகையொட்டி, அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக வந்த புகாரின்பேரில் சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் விஜிலென்ஸ் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் சத்துவாச்சாரி மற்றும் வள்ளலாரில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை, துணை இயக்குநர் அலுவலகங்களில் நேற்று மாலை 6.30 மணியளவில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த 2 அலுவலகங்களிலும் உள்பக்கமாக பூட்டிவிட்டு யாரையும் வெளியே அனுப்பாமல் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக ரெய்டு நடந்து வருகிறது. மேலும் கணக்கில் வராத பணம் ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல், தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலகத்தில் நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ஒவ்வொரு பணியாளர்களிடமும், தனித்தனியாக விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஊழியர் ஒருவரிடம், கணக்கில் வராத 7.85 லட்சத்தை பறிமுதல் செய்து, கோட்ட பொறியாளர் தனசேகர் மற்றும் 5 உதவி செயற்பொறியாளர்களிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: