வேதாரண்யம்: நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து ஒரு படகில் கடந்த 7ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த முத்துலிங்கம், ரஞ்சித், அண்ணாதுரை, ராஜ் ஆகிய 4 மீனவர்கள் படகில் டீசல் தீர்ந்ததால் காற்றின் போக்கில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராச்சி மாகாணம் வெற்றிலை கேணி அருகே உள்ள மாமுனை என்ற இடத்தில் கரை ஒதுங்கினர். அங்கு நான்கு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக தங்க வைத்து உணவு வழங்கினர். 3 நாட்கள் அங்கு தங்கி இருந்த மீனவர்களின் படகிற்கு 50 லிட்டம் டீசல் வழங்கி கோடியக்கரைக்கு அனுப்பி வைத்தனர்.