சென்னை: தமிழகத்தில் புதிதாக 2,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 77,309 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 2,210 பேர் குணமடைந்துள்ளனர்.