உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. வட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பாரதிஅண்ணா, மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் சம்பள பாக்கியில்லாமல் முழு ஊதியம் வழங்க வேண்டும்.