டெல்லி: குளிர் காலத்தில் சுவாச தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருந்திட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பொது வெளியில் கூட்டமாக சேருவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்டவற்றை அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பண்டிகை காலங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்திட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.