கணவன் இறந்த 3ம் நாளில் விபரீதம் 2 மகன்கள், மகளுடன் விஷம் குடித்தார் மனைவி: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: கணவன் இறந்த 3ம் நாளில் மனைவி தனது 2 மகன்கள், ஒரு மகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (55). முட்டை வியாபாரி. இவரது மனைவி சிவகாமி (50). இவர்களுக்கு பிரேம்குமார் (28), புவனேஸ்குமார் (23) என்ற இரு மகன்களும், ஷாலினி (16) என்ற மகளும் உள்ளார். பிரேம்குமார் அவரது அப்பாவின் முட்டை வியாபாரத்திற்கு உதவியாக இருந்துள்ளார். புவனேஸ்குமார் இன்ஜினியரிங் படித்து வருகிறார். ஷாலினி  12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ராஜா, கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது வீட்டில் நேற்று 3ம் நாள் காரியம் (சடங்கு) நடந்தது. மனவேதனையில் இருந்த அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம்  தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, சிவகாமி, பிரேம்குமார், புவனேஸ்குமார், ஷாலினி ஆகிய 4 பேரும் விஷம் குடித்தனர். நேற்று அதிகாலை அங்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து 4 பேரையும் மீட்டு  ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: