சூலூர்: சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வேணுகோபாலசாமி கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது. பல வருடங்களாக பராமரிப்பின்றி இருந்தது. இந்த நிலையில் கோயிலைத் திறந்து பூஜை செய்ய பூசாரி நேற்று காலை வந்தார். அப்போது கோயிலின் கோபுரத்தில் இருந்த செம்புக் கலசம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.