காஞ்சிபுரம்: வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க புதிதாக கட்டப்படும் பாதுகாப்பு கிடங்கை கலெக்டர் பார்வையிட்டார். செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணி (கட்டிடம்) துறை சார்பில் தேர்தலில் பயன்படுத்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க புதிய பாதுகாப்பு கிடங்கு கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகளுக்காக 7.5 கோடி ஒதுக்கீடு செய்து, 1949 சதுர மீட்டர் முழு பரப்பளவில் கிடங்கு கட்டப்பட்டுகிறது.