கலவை: கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் இருந்து காவல்நிலையம் இணைக்கும் கரடுமுரடான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ₹11 லட்சம் மதிப்பீட்டில் வாழைப்பந்தல் காவல்நிலையம் இணைக்கும் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஜல்லி கற்கள் மட்டும் சமன்செய்து உள்ளனர். அதன்மேல் மண் கொட்டாமல் கற்கள் காலில் குத்தும் அளவிற்கு உள்ளன. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.