திருவனந்தபுரம்: பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை அமலாக்கத்துறை சில நாட்களுக்்கு முன் கைது செய்தது. இவரை அமலாக்கத்துறை முதலில் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. தற்போது மீண்டும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை திருவனந்தபுரம் மருதன்குழியில் உள்ள பினீஷின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.