டெல்லி : மிஷன் சாகர் இரண்டாம் திட்டத்தின் கீழ், 2020, நவம்பர் 2-ஆம் தேதி இந்திய போர்க் கப்பலான ஐராவத், சூடான் துறைமுகத்திற்குள் நுழைந்தது. கோவிட்-19 தொற்று பரவலால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு நட்பு நாடுகளுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் இந்திய போர்க் கப்பலான ஐராவத், சூடான் நாட்டில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் 100 டன் உணவு பொருட்களுடன் பயணம் மேற்கொண்டது.