பாலக்காடு: பாலக்காடு அருகேயுள்ள நெம்மாரா- நெல்லியாம்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அடிக்கடி முகாமிடுவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ, காபி, மிளகு, ஆரஞ்சு, ரப்பர் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் விளைச்சல் அதிகளவு உள்ள இடம். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் வந்து செல்லும் சாலைகளில் அடிக்கடி காட்டுயானைகள் குட்டியுடன் முகாமிடுவதால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.