தமிழ்நாடு யாதவ மகா சபை எம்.கோபாலகிருஷ்ணன் படத்திறப்பு

சென்னை: தமிழ்நாடு யாதவ மகா சபையின் சார்பில் எம்.கோபாலகிருஷ்ணன் படத்திறப்பு நிகழ்வு மற்றும் புகழ் அஞ்சலி சென்னை முகப்பேரில் நடந்தது. இதில், கோபாலகிருஷ்ணன் மருமகன் ஆர்.ரமேஷ் மற்றும் குடும்பத்தினர், பாஜ தலைவர் எல்.முருகன், அதிமுக முன்னாள் எம்.பி மதுரை கோபாலகிருஷ்ணன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு யாதவ மகாசபை துணைத் தலைவரும் கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவருமான எம்.வி.சேகர், நக்கீரன் ஆசிரியர் கோபால், முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், திமுக தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியலிங்கம், திண்டிவனம் சேதுநாதன், திமுக உயர்மட்ட குழு உறுப்பினர் சைதை மகேஷ் குமார், காங்கிரஸ் எம்பி செல்லக்குமார், காங்கிரஸ் கட்சி பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், மலேசியா பாண்டியன் எம்எல்ஏ, தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வசந்த்&கோ தங்க மகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், யாதவ் பிரிவினருக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினார்.

Related Stories: