துபாய்: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 2 போட்டிகள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 13 போட்டிகளில் 5 வெற்றி,, 8 தோல்விகளுடன் பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை, வெற்றியுடன் தொடங்கிய தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் உள்ளது.
மறுபுறம் பஞ்சாப் 13 போட்டியில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. இன்று வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலையில் களம் காண்கிறது. இரு அணிகளும், 22 முறை மோதியதில், சென்னை 13, பஞ்சாப் 8 ல் வென்றுள்ளன.