சென்னையின் எப்சி பயிற்சியாளர்கள் அறிவிப்பு

ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி நடப்பு சீசனுக்கான தலைமை பயிற்சியாளராக ருமேனியோவை சேர்ந்த சிசாபா லஸ்லோ (56) ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடன் பணியாற்ற உள்ள உதவி பயிற்சியாளர், கோல்கீப்பிங் பயிற்சியாளர்களின் பட்டியலை சென்னையின் எப்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உதவி பயிற்சியாளராக போஸ்னியா-ஹெர்சகோவினாவைச் சேர்ந்த அட்மிர் கோஸ்லிக் (35) பொறுப்பேற்றுள்ளார். கோல்கீப்பிங் பயிற்சியாளராக செக் குடியரசின் மார்ட்டின் ரஸ்கா (43), விளையாட்டு பகுப்பாய்வாளராக  ஸ்லோவகியாவைச் சேர்ந்த சிசாபா கோப்ரிக் (31) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே  சிசாபாவுடன் பல்வேறு வெளிநாட்டு கால்பந்து கிளப்களில் இணைந்து பணியாற்றியவர்கள். விரைவில் கோவா சென்று சென்னை அணியுடன் இணைய உள்ளனர்.

Related Stories: