நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த பறக்கை, இலந்தவிளை பகுதியை சேர்ந்த குமரி கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளர் சிவராம பெருமாள்(43). இவர் தற்கொலைக்கு முன்பாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்தநிலையில், அவரது மனைவி சீதா, போலீசார் மீது குமரி மாவட்ட எஸ்.பி.க்கு ஆன்லைனில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கணவரை இழந்து மிக மன வருத்ததுடன் அழுதுகொண்டிருந்தபோது 26ம் தேதி இரவு 9 மணியளவில் சுசீந்திரம் எஸ்ஐ ஆறுமுகம் மற்றும் ஒரு போலீஸ்காரர் வந்து உறவினர்களை வெளியே அனுப்பிவிட்டு உங்கள் கணவர் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்த ஒரிஜினல் லெட்டர் எங்கே, அதனை இப்போது எங்களிடம் தர வேண்டும்.கேசை முடிக்க கையெழுத்து போட வேண்டும் என்றனர்.