புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் 145வது பிறந்தநாள் விழா மற்றும் இந்திரா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு படேல், இந்திராகாந்தி ஆகியோரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாத காலமே உள்ளதால் ஒருபுறம் காங்கிரஸ் கட்சிகாரர்களை ஒருங்கிணைக்க வேண்டும். மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளை சாடி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வியூகம் அமைக்க வேண்டும். தேர்தல் வருவதால் இனி வரும் காலங்களில் முக்கியமான 5 திட்டங்களை செய்ய உள்ளோம்.