இந்தியா கோவிஷீல்டு, கோவாக்சின் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் – 5 இந்தியா வருகை May 07, 2021 இந்தியா கோவிஷீல்ட் கோவாச்சின் தில்லி டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் – 5 தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ள நிலையில், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அதேநேரம், ரஷ்யாவில் உற்பத்திசெய்யப்படும் ஸ்புட்னிக் – 5 தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே முதல் தொகுப்பாக 1,50,000 ஸ்புட்னிக் – 5 தடுப்பூசிகள் மே 1ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பியது. தற்போது இரண்டாம் தொகுப்பாக 1,50,000 தடுப்பூசிகளை அனுப்ப உள்ளதாகவும், அடுத்த சில தினங்களில் அந்த தடுப்பூசிகள் இந்தியா வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘மே மாத இறுதியில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் 3 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அனுப்ப உள்ேளாம். ஜூன் மாதத்தில் 5 மில்லியன், ஜூலை மாதத்தில் 10 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் – 5 தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும். தடுப்பூசிகள் மட்டுமல்லாமல் 4 ஆக்சிஜன் உற்பத்தி டிரக்குகள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதேநேரம், ரஷ்யா ஸ்புட்னிக் – 5 தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 79.4 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். இந்த தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றை டோஸ் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா மற்றும் கானாவில் 7,000 பேருக்கு மூன்றாம் கட்ட பரிசோதனை நடக்கிறது. ரஷ்யா இதுவரை 8 மில்லியன் மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … The post கோவிஷீல்டு, கோவாக்சின் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் – 5 இந்தியா வருகை appeared first on Dinakaran.
பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி
சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
விவேகானந்த ரெட்டி கொலை பற்றி கருத்து தெரிவிக்க ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிலமோசடி வழக்கில் கைது ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? மேல்முறையீட்டு மனு 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
வாக்கு பதிவு விவரங்களை விரைவாக வெளியிட கோரி வழக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: விசாரணை மே.24க்கு ஒத்தி வைப்பு
பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு தண்டனை முன்னாள் சிறப்பு டிஜிபியை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன் மனுவை நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பெண்கள் இலவச பஸ் பயணத்தை எதிர்த்த மோடி பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்: மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற திட்டத்தை பொறுக்க முடியாமல் குறை கூறுவதா என விமர்சனம்
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்