ஹைதராபாத் : ஆந்திரத்தில் விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மதுபானங்களின் விலையை 30 % வரை குறைத்துள்ளது மாநில அரசு. ஆந்திர அரசின் உத்தரவை அடுத்து மதுபான பாட்டில் ரூ.50லிருந்து ரூ.1350 வரை விலை குறையும். அண்டை மாநிலங்களில் இருந்து ஆந்திரப் பிரதேசத்துக்குள் மதுபானம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது. மதுபானம் அருந்துவதைக் குறைக்க வேண்டும் என்று கூறி மதுபானங்களின் விலையை மே மாதம் 75 சதவீதம் வரை உயர்த்தியது ஆந்திரப்பிரதேச அரசு. ஆனால் மதுப்பழக்கம் குறைவதற்கு மாறாக அண்டை மாநிலங்களில் இருந்து ஆந்திரத்துக்குள் மதுபானம் கடத்துவது அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.