வேதாரண்யம்: கோடியக்கரையில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் 15 மீனவ கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலம். இந்த காலகட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இப்பகுதிகளுக்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்வது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதனால் தங்கள் தொழில் பாதிப்பு ஏற்படுவதாக கூறி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மனு அளித்தனர்.