வாஷிங்டன்: அமெரிக்க செனட் குழுவின் விசாரணைக்கு ஆஜரான கூகுள், டிவிட்டர், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம், `உங்களை யார் வேலைக்கு எடுத்தது?’ என்ற அதிர்ச்சி கேள்வி கேட்கப்பட்டது.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் குறித்து போலி செய்திகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. குறிப்பாக, குடியரசு கட்சியும், அதிபர் டிரம்்பும் குற்றச்சாட்டுகளை கூறினர். இதை கட்டுப்படுத்த செனட் சபையின் வர்த்தக குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில், பொய் தகவல்கள் பரப்பப்படுவது பற்றி விளக்கம் அளிக்கும்படி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, டிவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி, பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் ஆகியோருக்கு அமெரிக்க செனட் குழு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம் மூன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது, பல்வேறு கேள்விகளை கேட்டு ஜனநாயகக் கட்சியினரும் ,குடியரசுக் கட்சியினரும் அவர்களை துளைத்தனர்.