வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே வத்திராயிருப்பில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோசத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று பிரதோசத்தையொட்டி தாணிப்பாறை வனத்துறை கேட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் காலை 6:30 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தினர்.சென்னையிலிருந்து வாகனத்தில் 16 திருநங்கைகள் சுந்தரமகாலிங்க சாமியை தரிசிக்க வந்தனர்.