கரூரில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கரூரில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கரூரை சேர்ந்த இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடை, வாய்க்கால்களை ஆக்கிரமிப்பு செய்ததால் வீட்டுக்குள் மழைநீர் புகுவதாக இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: