அகழாய்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வழக்கு அரசுக்கு நோட்டீஸ்

மதுரை: மதுரையை சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக தொல்லியல் அகழாய்வுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கவும், தமிழக தொல்லியல் துறையில் காலியிடங்களை நிரப்பவும், தொல்லியல் பகுதிகளில் அனைவருக்கும் தேவையான நவீன கழிப்பறை, மருந்தக வசதி ஏற்படுத்தவும்  உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், மனு குறித்து மத்திய கலாச்சாரத்துறை முதன்மை செயலர், மத்திய அகழாய்வு நிறுவன இயக்குநர் ஜெனரல், தமிழக தொல்லியல் துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories: