மதுரை: மதுரை, பீ.பி.குளத்தை சேர்ந்தவர் மனோகரன் (53). டூவீலர் மெக்கானிக். கடந்த வாரம் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 3 நாட்களுக்கு முன் நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றினர். நேற்று முன்தினம் இரவு மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டு தனியாக இருந்துள்ளார். நேற்று காலை மனைவி திரும்பி வந்தபோது வார்டில் அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.