ஜோலார்பேட்டை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒரு சில சுற்றுலா இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் இரு சக்கர வாகனங்களிலும், கார் மூலமாகவும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்துவிட்டு செல்கின்றனர். இதனால் ஏலகிரி மலை காவல் நிலைய போலீசார் பொன்னேரி மலையடிவாரத்தில் வாகன சோதனை சாவடி அமைத்து இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மலைக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர்.