ராஞ்சி: உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீதான ஊழல் புகார் பற்றி வழக்குப்பதிவு செய்ய மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார். இவர் மீது லஞ்சப் புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர் ஒருவர் தாக்கல் செய்த மனு ஒன்று விசாரணைக்கு வந்தது.