டெல்லி: ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி மூலம் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகாவில் பெய்த கனமழையால் வெங்காயம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விலை படிப்படியாக உயர்ந்து கொண்டு வந்தது. குஜராத் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது விலை 100-ஐ தாணடியுள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.