வத்திராயிருப்பு: பிரதோஷம், பவுர்ணமியையொட்டி நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் 3 நாட்களும், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை பிரதோஷம், வரும் 30ம் தேதி பவுர்ணமி என்பதால், நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.