செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. இயற்கை முறையில் வெண்டை, கத்தரி, தக்காளி ஆகியவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.3,750 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் அதிகபட்சமாக தலா விவசாயி 2 ஹெக்டர் வரை ஊக்கத்தொகை பெறலாம். ஏற்கனவே இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும், புதிதாக இயற்கை விவசாயம் செய்பவராக இருந்தாலும் அங்ககச் சான்று பெற ரூ.500 வழங்கப்படும்.
இந்தாண்டு, 133 ஹெக்டர் காய்கறி சாகுபடி பரப்பளவை இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள 400 விவசாயிகளுக்கு, இயற்கை விவசாய சாகுபடி சான்றிதழ் பெற ரூ.500/- வழங்கப்படும். விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இயற்கை விவசாயம் செய்யலாம்.