முன்னாள் ஆரணி நகர திமுக செயலாளர் முத்து இல்ல திருமண வரவேற்பு விழா: கி.வேணு பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: முன்னாள் ஆரணி நகர திமுக செயலாளர் பி.முத்து - எம்.அமுதா ஆகியோரின் மகன் எம்.யுவராஜ். வி.முர்த்தி - எம்.மல்லிகா ஆகியோரது மகள் சௌமியா ஆகியோரது திருமண வரவேற்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கவரப்பேட்டையில் உள்ள எம்.வி.பேரடைஸ்ஸில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கே.எஸ். பாலு, மாவட்ட பிரதிநிதி கு.கரிகாலன் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை வகித்து மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், ஜெ.முர்த்தி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமா மகேஷ்வரி, அவைத்தலைவர் பகலவன், ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், செல்வசேகரன், கருணாகரன், சக்திவேல், சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், மாவட்ட பிரதிநிதிகள் கி.வே.ஆனந்த, எம்.ஆர்.ஸ்ரீதர், ஆரணி நிர்வாகிகள் முனிவேல், அன்புவாணன், ஜி.பி.வெங்கடேசன், டி.கண்ணதாசன், சத்தியா உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட   திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories: