திருமண வரவேற்பில் வெங்காயம் கிப்ட்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆரணியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு வெங்காயத்தை தோழிகள் பரிசளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. திருவொற்றியூரை சேர்ந்தவர் ஷீபா சுவிதா. பொன்னேரி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆரணியை சேர்ந்த பொறியாளர் செந்தில்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வரவேற்பு நிகழ்ச்சி ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மணமகளின் தோழிகள் வெங்காயம் அடங்கிய தொகுப்பு பையினை மணமக்களுக்கு திருமண பரிசாக அளித்தனர். வெங்காயம் விலை திடீரென கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்த நிலையில் 5 கிலோ வெங்காயத்தினை பூச்செண்டுபோல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் திருமண பரிசாக அளித்தது திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Related Stories: