கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் 150 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும். கோவிலில் விஜயதசமியன்று மகர நோன்பு உற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக வருடா வருடம் நடைபெறும். விழாவில் சிலம்பாட்டம், வாணவேடிக்கை, சிறப்பு மேளதாள வாத்தியங்கள், மண்டகப்படி நிகழ்ச்சிகள், சுவாமி நகர் வலம் வரும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். கொரோனா காரணத்தினால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, எளிமையான முறையில் நடைபெற்றது. நவராத்திரி விழா கடந்த 10 தினங்களுக்கு முன்பாக துவங்கப்பட்டு, கொலுவைக்கப்பட்டு தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்த விழாவில் மகர நோன்பு உற்சவ விழா வருடா வருடம் சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம்.