நாக்பூர்: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவருடைய மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு எதிராக டிவிட்டரில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். கைது செய்யப்பட்டவரின் பெயர் சமீத் தக்கர். இவர் நாக்பூரை சேர்ந்தவர். சமீத் தக்கர் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர். இவர் டிவிட்டரில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அமைச்சர் ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்தை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமீத் தக்கர் அக்டோபர் மாதம் 5ம் தேதி மும்பையில் உள்ள வி.பி.ரோடு போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அவர் தனது லாப்டாப்பையும் செல்போனையும் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.