மும்பை: தாராவியில் 6 பேருக்கு புதிதாக நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மொத்த பாதிப்பு 3,489 ஆக உயர்ந்துள்ளது. மும்பை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: தாராவியில் நேற்று 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 3489 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,030 ஆக உயர்ந்துள்ளது தற்போது 151 பேர் மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மாகிமில் 21 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு மொத்த பாதிப்பு 3,968 ஆக அதிகரித்துள்ளது.