சிட்டி சென்டர் மாலில் தீ விபத்து 56 மணிநேரம் போராடி அணைப்பு: 5 தீயணைப்பு வீரர்கள் காயம்

மும்பை: மும்பை சிட்டி சென்டர் மாலில் பற்றி எரிந்த தீ 56 மணி நேர போராட்டத்துக்கு பின் அணைக்கப்பட்டது. தீயணைப்பு போராட்டத்தின்போது 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மும்பை சிட்டி சென்டர் மாலில் கடந்த வியாழக்கிழமை இரவு 8.50 மணிக்கு பற்றிய தீ மளமள என பரவியது. இது தொடர்ந்து அங்கிருந்த கடைகளுக்கு பரவியது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த 3,500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து தீயை அணைக்க மாநகரில் உள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். அவர்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேலாக தீயை அணைத்து வந்தனர். இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை 5 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீயை அணைக்க 56 மணிநேரமாக வீரர்கள் போராடியபோது தீயணைப்பு துணை உதவி அதிகாரி ஒருவர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் தெற்கு மும்பை ஆயுத சந்தையில் ஏற்பட்ட தீயை அணைக்க 45 மணிநேரம் நடந்த போராட்டமே அதிகபட்ச தீயணைப்பு போராட்டமாக இருந்தது.

Related Stories: